தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மருத்துவமனைகளில் தற்போது 12 வகையான, மருந்துகளுக்கு மட்டுமே தட்டுப்பாடு…!

0 16

நாட்டில் பற்றாக்குறையாக இருந்த 146 வகையான மருந்துகள் இந்திய கடனுதவியின் கீழ், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகளில் தற்போது 12 வகையான மருந்துகளுக்கு மட்டுமே தட்டுப்பாடு நிலவுவதாக, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது பற்றாக்குறையாக உள்ள மருந்துகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில வாரங்களில் அவை நாட்டிற்கு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

31 வகையான புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகவுதம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.