தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மன்னிப்பு கோர மாட்டேன்-ரஞ்சன் ராமநாயக்க

0 492

மன்னிப்பு கோர மாட்டேன் என நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் ஆணைக்குழுவில் இன்று சாட்சியமளிக்க அழைத்து வரப்பட்டிருந்த அவர், சாட்சியமளித்து விட்டு வெளியேறும் போது ஊடகவியலாளர்களை பார்த்து இதனை கூறியுள்ளார்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் பொது மன்னிப்பு கிடைக்குமா, நீங்கள் அதனை எதிர்பார்க்கின்றீர்களா என ஊடகவியலாளர்கள் சிறைச்சாலை பேருந்தில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவிடம் வினவினர்.

“அதற்கு தெரியவில்லை என தலையை அசைத்தும் கைகளை விரித்தும் பதிலளித்ததுடன் மன்னிப்பு கோர மாட்டேன்” எனக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.