தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மனிதாபிமான உதவிகளைத் தடுக்க ரஷ்யா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது- உக்ரைனின் உள்கட்டமைப்பு அமைச்சர்

0 472

ரஷ்யாவின் படையெடுப்பின் காரணமாக உக்ரைன் நாட்டுக்கு சுமார் 10 பில்லியன் டாலர் (₹77,000 கோடி) சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைனின் உள்கட்டமைப்பு அமைச்சர் அலெக்சாண்டர் குப்ராகோவ் தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய அமைச்சர் அலெக்சாண்டர் குப்ராகோவ்,

” ரஷ்யா படையெடுப்பின் காரணமாக உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்புக்கு சுமார் 10 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது, இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை வரை கணக்கிடப்பட்டது. பெரும்பாலான சேதமடைந்த கட்டமைப்புகள் ஒரு வருடத்தில் சரிசெய்யப்படும், மிகவும் கடினமானவை இரண்டு ஆண்டுகளில் சரிசெய்யப்படும்.

ஞாயிற்றுக்கிழமையன்று கிழக்கு நகரமான கார்கிவில் இருந்து 40,000 பேர் வெளியேற்றப்பட்டனர். ஆனால், பொதுமக்கள் மற்ற நகரங்களை விட்டு வெளியேற அனுமதிக்குமாறு ரஷ்யாவிடம் உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது” எனத் தெரிவித்தார்.இந்த நிலையில், உக்ரைன் உள்துறை அமைச்சக அதிகாரி வாடிம் டெனிசென்கோ, தலைநகர் கீவின் புறநகரில் இருந்து இன்னும் 4,000 பொதுமக்கள் வெளியேற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், “மனிதாபிமான உதவிகளைத் தடுக்க ரஷ்யா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது” என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.