Developed by - Tamilosai
வவுனியாவில் நேற்றிரவு(11) ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் கூறினர்
உயிரிழந்த நபர் வவுனியா நகரில் தனியாக வசித்து வந்தவர் என பொலிஸார் கூறினர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வவுனியா நீதவான் முன்னிலையில் நாளை(13) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.