Developed by - Tamilosai
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் படுகொலை செய்யப்பட்டதாகவும், சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (04) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அயல் குடும்பத்திற்கும் தனது குடும்பத்திற்கும் ஏற்பட்ட கைகலப்பை விலக்குவதற்கு சென்ற தாயே இவ்வாறு பொல்லால் அடிபட்டு உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சந்திரசேகரன் கலாதேவி (வயது 57) என அடையாளம் காணப்பட்டார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஹற்றன் நீதிமன்றத்தின் நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹற்றன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஹற்றன் கைரேகை அடையாளப் பிரிவு மற்றும் வட்டவளை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.