Developed by - Tamilosai
பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பொரளைப் பகுதியில் கடமையிலிருந்த மூன்று போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
இதன்போது, காயமடைந்த மூன்று பொலிஸ் அதிகாரிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவந்த விசாரணைகளுக்கு அமைய 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.