தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பத்தை ஒத்திவைக்க கோரிக்கை

0 164

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில் பொதுப் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதை ஒத்திவைக்குமாறு பிரதிச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொதுப்போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதன் ஊடாக மீண்டும் கொரோனா வைரஸ் பரவலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்று தொடர்பில் மக்கள் கவனயீனமாக இருப்பதை அவதானித்து கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.