Developed by - Tamilosai
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள வீடொன்றிக்குள் நுழைந்த நபர் வீட்டில் இருந்த பெண்ணிடம் விலாசம் ஒன்றை காண்பித்து விசாரித்துள்ளார்.
பின்னர் வீட்டில் இருந்து வெளியேறுவது போல் சென்று விட்டு பின்னர் திரும்பி வந்து அந்த பெண் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை அறுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
அந்த பெண் தங்க சங்கிலியை அறுக்க விடாது தடுத்த நிலையில் பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.