தமிழ் ஓசை
தமிழ் ஓசை

புலமைப் பரிசில் பரீட்சையில் தேசியரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார் யாழ். கொக்குவில் மாணவன்

0 448

யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் 2021ம் ஆண்டு தரம் -5 புலமைப் பரிசில் பரீட்சையில் தேசியரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற உள்ளேன் என்றார். நேற்றிரவு வெளியாகிய 2021 தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடிப்படையில் அகில இலங்கை ரீதியில்

யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் முதலிடத்தை பெற்று வந்த நிலையில் தனது சாதனை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நான் சூம் வகுப்பினூடாகவே எனது படிப்பினை மேற்கொண்டேன். எனது அம்மா ஆசிரியர் அப்பா வியாபாரம் செய்கிறார். எனது அம்மா மற்றும் அப்பா ஊக்கமளித்ததன் காரணமாகவும்

எனது பாடசாலையின் வகுப்பாசிரியர் மற்றும் எனது ஆசிரியர்களின் ஊக்கத்தின் காரணமாகவே இந்த பெரு வெற்றியைபெற முடிந்தது. அத்தோடு எதிர்காலத்தில் நான் பொறியியலாளராக வந்து

தமிழ் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன் என்றார்

Leave A Reply

Your email address will not be published.