Developed by - Tamilosai
காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமென்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு பொது மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கமைய மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும்.
அத்தோடு, காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமென்றும் பெற்றோரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
இருமல், காய்ச்சல் இருப்பவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டாமெனவும் அவர் அறிவுறுத்தினார்.