தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பால்மா விற்பனையாளர்களின் மேல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

0 38

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பழைய விலையில் உள்ள பால்மாக்களை பதுக்கி வைத்திருந்த வர்த்தக நிலையம் முற்றுகையிடப்பட்டு பால்மாக்களும் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவி பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சில்லறை வியாபார நிலையமொன்றில் 540.00 ரூபா 790.00 ரூபா ஆகிய பழைய விலையில் பதுக்கி வைக்கப்பட்ட 400 கிராம் பால்மாக்கல் பறிமுதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டதுடன், பால்மாக்கள் புதிய விலையான 1160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக வழக்குத்தாக்களும் செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.