Developed by - Tamilosai
நேற்று(17) காலையில் இருந்து நுவரெலியா மாவட்டத்தில் 12 வயது பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா டெஸ்போட் தோட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் ஆசான் என்ற 12 வயது பாடசாலை மாணவனைக் காணவில்லை என்று நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நானுஓயா பொலிஸார் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது