தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பருப்பு விலையை பார்க்க ஜனாதிபதியாக நான் தேவையில்லை: கோட்டாபய

0 269

நாட்டு மக்கள் என்னை ஜனாதிபதியாக நியமித்தது பருப்பு மற்றும் அரிசியின் விலைகளைப் பார்த்துக் கொள்வதற்கு என்றால் அதற்கு நான் தேவையில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நூறு சதவீதம் கரிம உரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயப் பண்ணையைப் பார்வையிட இன்று சென்ற போது அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

‘எங்களது முந்தைய அரசாங்கங்கள் கூட இதைச் செய்ய முயற்சித்தன. இது கடினமான பணி. எனது முன்னோர்களுக்குத் தெரியும் பாரம்பரிய பயிர்ச் செய்கையை எப்படி செய்வது என்று. ஆனால் துரதிஷ்டவசமாக எந்தத் தலைவரும் இந்த முடிவை எடுக்கவில்லை.

என்னை நியமித்தது பருப்பு மற்றும் அரிசியின் விலையைப் பார்த்துக் கொள்வதற்காக என்றால் அதற்கு நான் தேவையில்லை.

அதை விட மாற்றம் ஒன்றை கொண்டு வருவதற்காகவே, விசேடமாக இந்த விவசாயத் துறை தொடர்பில் நான் ஜனாதிபதியாக  வந்தது முதல் உரத்தை இலவசமாக வழங்கினேன்.

உண்மையில் விவசாயியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவே உரம் இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோன்று நெல்லின் உத்தரவாத விலையை அதிகரித்தோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.