Developed by - Tamilosai
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகே பயணப் பொதியொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் குப்பை கொட்டப்பட்டிருந்த இடமொன்றில் பயணப் பையொன்றில் வைத்து வீசப்பட்டிருந்த நிலையிலேயே பெண்ணின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
எனினும், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் சப்புகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.