Developed by - Tamilosai
இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தமது சம்பளப் பிரச்சினையை முன்வைத்து இவ்வாறு பணிக்கு சமூகமளிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் பல்வேறு பகுதிகளிலும் சேவையில் ஈடுபடாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.