Developed by - Tamilosai
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்காரணமாக இன்று திங்கட்கிழமை பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியது.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வனஇலாகாவுக்குரிய காணியை விகாரை அமைப்பதற்குக் கோரியதாகவும் அதனை வழங்குவதற்குத் தனக்கு அதிகாரம் இல்லையென பிரதேச செயலாளர் தெரிவித்ததைத் தொடர்ந்தே இந்த போராட்டத்தை குறித்த பிக்கு முன்னெடுத்தார்.
பிரதேச செயலாளரையும் ஊழியர்களையும் அச்சுறுத்தும் வகையில் குறித்த பிக்கு போராடிவருவதாகவும் பொலிஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.