தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நீர் வெறுப்பு நோயினால் 12 பேர் உயிரிழப்பு

0 80

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நீர் வெறுப்பு நோய் (Rabies) காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கான தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் டொக்டர் L.D.கித்சிறி தெரிவித்தார்.

விரைவில் நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு இதற்கான தடுப்பூசிகளை ஏற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் வருடத்தில் நீர் வெறுப்புநோயினால் 20 முதல் 30 மரணங்களே பதிவாகின்றன. ஆனால் இந்த வருடத்தில் கடந்த 5 மாதங்களில் மாத்திரம் 12 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.