Developed by - Tamilosai
கடந்த 9 ஆம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம அமைதி போராட்டங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னரான அமைதியின்மை தொடர்பிலான விசாரணைகளுக்காக எவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் ஆகியோர் எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதி குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.