தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை பதவியிலிருந்து நீக்குமாறு பகிரங்க கோரிக்கை

0 443

நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திடம் கோரி வருகின்றனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான பின்னணியில் பசிலை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரியுள்ளனர்.

அரசாங்கத்திற்கு ஆதரவான பௌத்த பிக்குகள் அரச தலைவர் கோட்டாபயவிடம் நேற்று இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசிலை பதவி நீக்குமாறு ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.