தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டை விட்டு வெளியேறும் இளைய தலைமுறை – சஜித் பிரேமதாச

0 48

நமது நாட்டின் அறிவார்ந்த இளைய தலைமுறை நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இன்று வாழ்வதற்கான உரிமையைக்கூட இலங்கை மக்கள் இழந்துள்ளதாகவும், பெருமளவான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றதாகவும், எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் புத்தி பேதலிக்கும் அனர்த்தத்தை இலங்கை எதிர்கொண்டுள்ளது. தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் அது சார்ந்த செயற்பாட்டு வரைபடம் உரிய கால எல்லையுடன் நடைமுறைப்படுத்தப்படும் வரை எமது நாட்டை கட்டியெழுப்ப முடியாது. அதற்கு புதிய மக்கள் ஆணையுடன் நிலையான அரசாங்கமொன்று தேவை. அவ்வாறு செய்யாமல் மக்களை ஏமாற்றிய வண்ணம் இந்நாட்டை கட்டியெழுப்ப முடியாது.என்றும் அவர் தெரிவித்தார்.

பெருமளவான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக விமான சேவைகள் நிறுவனங்களின் பங்குதாரர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.