தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டை வந்தடையவுள்ள டீசல் கப்பல்

0 62

இன்று(16) 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் கொழும்பை வந்தடையவுள்ளது.

இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 700 மில்லியன் கடன் வசதியின் கீழ் டீசல் கிடைக்கவுள்ளது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், பெட்ரோல் கப்பல் வரும் திகதியை இதுவரை உறுதியாக கூறவில்லை.

இன்று(16) வந்தடையவுள்ள டீசலை விநியோகம் செய்வதற்கு இன்னும் 03 நாட்கள் செல்லும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இல்லை என தெரிவித்து சில எரிவாயு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எனினும் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இன்று(16) அதிகாலை முதல் மக்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.