தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டில் மேலும் 527 பேருக்கு கொரோனா உறுதி

0 125

நாட்டில் மேலும் 527 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இலங்கையில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5,47,873 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 272 பேர் பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,22,789 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,908 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.