தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டில் மேலும் 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 92

நாட்டில் மேலும் 512 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனாத் தொற்றிலிருந்து மேலும் 381 பேர் பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனாத் தொற்றிலிருந்து பூரணமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 23 ஆயிரத்து 503 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றால் 13 ஆயிரத்து 950 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.