Developed by - Tamilosai
மேல் சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்குறித்த இடங்களில் 50 மில்லி மீட்டர் அளவில் பலத்த மழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் பொதுமக்களை அந்நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.