Developed by - Tamilosai
இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த சீனத் தூதுவர் Qi Zhenhong அடுத்த மாதம் நாட்டின் கிழக்குப் பகுதிக்கும் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் குழுவுடனான கலந்துரையாடலில் போது சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மேலும் திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவடங்களில் இருந்து மக்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்தும் கோரிக்கைகள் கிடைக்கபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.