Developed by - Tamilosai
இந்தியாவில் இருந்து நனோ நைட்ரஜன் திரவ உரத்தை அதிகமாக இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
வரவு – செலவுத் திட்டத்திற்கு அனுமதியைப் பெறுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின்போது, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், கூட்டெருவை இலவசமாக விநியோகிக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.