தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தொடருந்தில் ஏற முயன்றவர் தவறி விழுந்து பலி

0 62

நேற்று(17) இரவு மாத்தறை தொடருந்து பேருந்து நிலையத்தில் தொடருந்தில் சிக்குண்டு திக்வெல்ல வேவுருக்கன்னல பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் பலியானார்.

மாத்தறையில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த சாகரிகா தொடருந்தில் ஏற முற்பட்ட போது தவறி விழுந்து தொடருந்தின் அடியில் சிக்கியுள்ளார்.

மாத்தறை செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்பதற்கு ஒரு மணித்தியாலமாக முயற்சிகளை மேற்கொண்டு மீட்ட போதிலும் அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.