Developed by - Tamilosai
சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு அடுத்த கட்டத்திற்கு செல்லும் விதமாக, தைவானை சுற்றி சீனா ராணுவ படைகள் மாபெரும் போர் ஒத்திகைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. இதுதொடர்பாக சீனா அரசு தரப்பு தெரிவித்துள்ள தகவலில், இன்று நண்பகல் 12 மணி அளவில் தைவான் தீவை சுற்றியுள்ள ஆறு முக்கிய இடங்களில் போர் ஒத்திகை நடைபெறும். கடற்படை, விமானப் படை போர் ஒத்திகைகள் நடைபெறும் இந்த நேரத்தில் வேறு விமானங்களோ, கப்பல்களோ அந்த பகுதிக்குள் நுழைய வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.