Developed by - Tamilosai
எதிர்வரும் தேர்தலில் தேசியப் பட்டியலில் 50 சதவீத பிரதிநிதித்துவம் பெண்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய பரிந்துரைத்துள்ளது.
தேர்தல் மறுசீரமைப்பிற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் குறித்த கட்சி இவ்வாறு பரிந்துரையை மேற்கொண்டுள்ளது.
அதேபோன்று, வேட்பாளர் பட்டியலில் 25 சதவீத பிரதிநிதித்துவம் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் பிவிதுரு ஹெல உறுமய சார்பில் அமைச்சர் உதய கம்மன்பில பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுக் கூட்டம் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், இம்முறை தேர்தல் பிரசாரத்தின் போதும் சுவரொட்டி தடையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, தேர்தலில் வேட்பாளர்கள் செலவிடும் பணத்திற்கு வரம்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.