தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தாமதமாகும் எரிவாயு தரையிறக்கம்

0 70

நேற்றுமுன்தினம் நாட்டிற்கு வருகை தந்த கப்பலில் இருந்து, எரிவாயு தரையிரக்கும் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

3 900 மெட்ரிக்டொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று இவ்வாறு நாட்டை வந்தடைந்தது.

எவ்வாறாயினும், குறித்த கப்பலுக்கான 2.5 மில்லியன் டொலர் நிதி செலுத்தப்படாமை காரணமாக எரிவாயு தரையிறக்க முடியாத நிலை காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினமும் எரிவாயு விநியோகிக்கப்படாத நிலையில் இன்றைய தினமும் விநியோகிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.