Developed by - Tamilosai
இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் ஷாலிஹ் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மாலைதீவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அஹமட் கலீல், மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தின் வெளிவிவகார செயலாளர் இப்ராஹிம் ஹூட், இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் உமர் அப்துல் ரசாக் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.