Developed by - Tamilosai
அரசியல் ரீதியான கருத்துக்களை அதிகம் வெளியிட விரும்பவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற செயலணிக்குத் தலைவராக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை தொடர்பாக மட்டக்களப்பில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முடிவின் பேரிலேயே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரே நாடு – ஒரே சட்டம் என்கின்ற உட்பொருளை நான் ஊடகங்கள் வாயிலாக விமர்சிக்க முடியாது. அதனுடைய நோக்கம் என்னவென்று உங்களுக்குத் தெரியும் தானே.
நானும் வர்த்தமானி மூலம் ஜனாதிபதியின் முடிவினை பார்த்திருந்தேன். அவர் எந்த நோக்கத்திற்காக ஞானசார தேரர் நியமித்தார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஜனாதிபதியின் நிலைப்பாட்டினை என்னால் விமர்சிக்க முடியாது. என்னுடைய நிலைப்பாடு அரசாங்கத்துடன் சேர்ந்து மக்களுக்கான நியாயத்துடன் சேவை செய்வது.
ஒரே நாடு ஒரே சட்டம் என்பதைப் பற்றிக் கருத்து வெளியிடுவதாக இருந்தால் விரிவாக பேச வேண்டும். இது பல விமர்சனங்களைக் கொண்டு வரலாம். அதனால் நான் கதைக்க விரும்பவில்லை.
ஞானசார தேரர் பற்றி என்னைவிட ஊடகவியலாளர் உங்களுக்குத் தெரியும் தானே. இதில் என்ன இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.