தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு

0 441

சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளும் கட்சியின் 10 பங்காளிக்கட்சிகள் ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சந்திப்பின்போது அவர்கள் பல விசேட தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் 3 தரப்பினர் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.