Developed by - Tamilosai
எதிரணியினருடன் ஏற்பட்ட காரசாரமான விவாதத்தில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை அமைதிப்படுத்தும் வகையில் செயற்பட்டார்.
உர விவகாரம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினருடன் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.
அமைச்சருக்கு அருகில் அமர்ந்திருந்த லொஹான் ரத்வத்த எதிரணியினரை நோக்கி கூச்சலிட்டதுடன் தகாத வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார்.
இதன்போது அருகிலிருந்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ரத்வத்தவின் தலையில் கைகளை வைத்து அவரை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
இருப்பினும் கோபத்தில் மீண்டும் மீண்டும் கடும் சொற்பிரயோகங்களை மேற்கொள்ள மஹிந்தானந்த அளுத்கமகே இராஜாங்க அமைச்சரைக் கட்டுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார்.
லொஹான் ரத்வத்த சிறைச்சாலையில் கைதிகளை மண்டியிட வைத்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.