தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் பதற்ற நிலை தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள அறிவிப்பு

0 441

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் பதற்ற நிலை தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பொது மக்களுக்கு அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் மகிந்தவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த பதிவில்,

இலங்கையில் உணர்ச்சிகள் அதிகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் இது வன்முறையைத் தூண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு பொருளாதார தீர்வு தேவை, அதை தீர்க்க இந்த நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.