Developed by - Tamilosai
நாட்டில் மேலும் 219 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, நாட்டில் இன்று இதுவரை 732 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,52,274 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,016 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இதுவரை கொரோனா தொற்றிலிருந்து பூரணமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,24,311 ஆக அதிகரித்துள்ளது.