Developed by - Tamilosai
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்தனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (01) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,791 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 5 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 16 பேரும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்மோரில் 06 ஆண்களும் 10 பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.