தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“கொரோனாவின் புதிய வகை பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம்”

0 123

 கொரோனா வைரஸின் A.30 என்ற புதிய வகை பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம் இருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரித்துள்ளார்.

ஏனைய நாடுகளில் முன்னர் கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா வைரஸின் பிறழ்வுகளும்  குறுகிய காலத்திற்குள் இலங்கையில் கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, புதிய மாறுபாடும் நாட்டில் எந்த நேரத்திலும் அடையாளம் காணப்படலாமெனவும் அவர் தெரிவித்தார்.

இந்த புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழைந்து பரவத் தொடங்கினால், நிச்சயமாக ஒரு பேரழிவு சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

எனவே, சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.