Developed by - Tamilosai
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 17 பேர் உயிரிழந்தனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (08) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,892 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 30 வயதுக்கு கீழ்ப்பட்ட 01 ஆணும், 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 01 ஆணும் 01 பெண்ணும், 60 வயதுக்கு மேற்பட்மோரில் 08 ஆண்களும் 06 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 6,689 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,22,184 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5,45,935 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.