Developed by - Tamilosai
கிளிநொச்சியில் ஏ – 9 வீதியில் தனியார் வங்கி முன்பாக இன்று காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.விபத்தில் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பாதசாரி கடவையில் ஏ – 9 வீதியைக் கடக்க முற்பட்ட போது டிப்பர் வாகனம் ஒன்று குறித்த முதியவரை மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது
விபத்தில் குறித்த முதியவரின் கால் துண்டாடப்பட்டுள்ளதுடன், தலைப்பகுதியிலும் பாரிய பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.