Developed by - Tamilosai
கொச்சிக்கடை தளுவகொடுவ பிரதேசத்தில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் பணியாற்றிய 66 வயதுடைய காவலாளி ஒருவரை கொலை செய்து விட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்களில் இருந்து சுமார் 80,000 ரூபா பெறுமதியான மூன்று ஜோடி பக்கவாட்டு கண்ணாடிகளை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொச்சிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.