Developed by - Tamilosai
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை மீளப்பெறுவதற்கான காரணங்களை விளக்கி இரகசிய அறிக்கையைத் தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை சட்டமா அதிபருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் நெரின் புள்ளே, கரன்னகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை மீளப்பெற்றமை தொடர்பில் தொகுக்கப்பட்ட இரகசிய அறிக்கையை தமது திணைக்களம் வைத்துள்ளதாகத் தெரிவித்ததோடு, அதனை இரகசிய அறிக்கையாகத் தாக்கல் செய்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரினார்.
இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா மற்றும் நீதியரசர் தம்மிக்க கணேபொல ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த அறிக்கையை நாளை (நவம்பர் மாதம்) 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட மீது குற்றச்சாட்டுக்களைத் தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.