Developed by - Tamilosai
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடத்திய கந்தசஷ்டி முருக நாம பஜனை நிகழ்வானது காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் புதன்கிழமை மாலை 3.20 மணி தொடக்கம் 6.00 மணிவரை இடம்பெற்றது.
இந்நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சி. ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றதுடன் சிறப்பு அதிதிகளாக சுவாமி விபுலாநந்தர் பணிமன்றத் தலைவர் வெ.ஜெயநாதன், அறங்காவலர் ஒன்றியத் தலைவர் இரா. குணசிங்கம்,செயலாளர் எஸ்.நந்தேஸ்வரன்,மன்ற உபசெயலாளர் எஸ்.விஜயரெத்தின் மற்றும் மாவட்டச்]செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் ந.பிரதாப், காரைதீவு பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி சிவராஜா சிவலோஜினி, கல்முனை வடக்கு இந்து கலாசார உத்யோகத்தர் திருமதி உருத்திரமூர்த்தி கெளசல்யவாணி, திருக்கோவில் பிரதேச இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி பிரசாந் சர்மிளா ஆகியோர் கலந்து கொண்டதுடன் காரைதீவு சர்வேஸ்வரா பஜனை குழுவினர். மற்றும் சகானா கலைக்கூட பஜனை குழுவினரின் முருக நாம பஜனை இடம்பெற்றதுடன் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டதுடன் நிகழ்வுக்கான ஒழுங்கமைப்புக்களை மாவட்ட செயலக இந்து சமய கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி மேற்கொண்டிருந்தார்.