Developed by - Tamilosai
அம்பாறை – பதியத்தலாவை பிரதேசத்தில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த 17 பேர் மஹாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த பேருந்து நேற்றிரவு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் பேருந்தில் சாரதி மற்றும் நடத்துனர் உள்ளிட்ட 45 பேர் இருந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதியை கைதுசெய்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.