Developed by - Tamilosai
பிரதமர் அலுவலகத்தில் இன்று(26) மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பத்து கட்சிகளின் பிரதிநிதிகள் இடையிலான கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.
இக் கலந்துரையாடலில் 21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
மேலும் நாளை(27) பிரதமர் தலைமையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களுடைய பங்கேற்புடன் 21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.
இதன் போது கட்சித் தலைவர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.