Developed by - Tamilosai
உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
கடன்களை மீளச்செலுத்தமுடியாதவாறு, முறிவடையக்கூடிய நிலையின் விளிம்பில் இலங்கை இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அச்செய்திகள் உண்மைக்கு புறம்பானது என அறிக்கையொன்றில் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை கடன்களை மீளச்செலுத்தமுடியாதவாறு முறிவடையக்கூடிய நிலையின் விளிம்பில் இருப்பதாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம்.
அவ்வாறு வெளியாகியுள்ள செய்திகள் எவ்வித அடிப்படைகளும் அற்றவை.