Developed by - Tamilosai
சீரற்ற வானிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கேகாலை, குருநாகல், இரத்தினபுரி, களுத்துறை, கண்டி மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 7 மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களும் மண்சரிவு அபாயம் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.