தமிழ் ஓசை
தமிழ் ஓசை

எரிபொருள் வரிசைக்கு காரணம் என்ன?-இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர்

0 443

தேவையான அளவு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்ற போதிலும் வாகனங்களுக்கு மேலதிகமாக எரிபொருளை சேகரிப்பதால் மக்கள் வரிசையில் நிற்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இக்காலப்பகுதியில், நாட்டில் தினசரி பெற்றோலின் தேவை 1,000 மெட்ரிக் தொன்களாலும், டீசலின் நாளாந்த தேவை 2,500 மெட்ரிக் தொன்களாலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எரிபொருளை பதுக்கி வைக்க வேண்டாம் என மக்களை வலியுறுத்திய அவர், நாளாந்தம் தேவையான எரிபொருளை வழங்குவதில் பிரச்சினை இல்லை எனவும் தெரிவித்தார்.

தனக்குத் தேவையான எரிபொருளை மட்டும் பெற்றுக்கொள்ள முடிந்தால் அனைத்து வரிசைகளும் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.