Developed by - Tamilosai
வாடிக்கையாளர்களின் துன்புறுத்தல்கள், தாக்குதல்கள், எரிபொருள் கொள்வனவு செய்ய பணமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் நாட்டில் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோக சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கிடைக்கும் எரிபொருட்களே விநியோகம் செய்யப்படுவதாகவும் ஊரில் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.