தமிழ் ஓசை
தமிழ் ஓசை

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மோதல் – 9 பேர் கைது

0 63

கொழும்பின் புறநகர் அத்துருகிரிய பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் தீர்ந்து போயிருந்த போதும், வரிசையில் காத்திருந்த மக்கள் எரிபொருள் கேட்டு குழப்பத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த 6 காவல்துறை உத்தியோகத்தர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெண்  உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.